பாரத மாதாவின் தவப்புதல்வன் பரட்சிப்போராளி சூர்யா சென் நினைவு தினம் இன்று! சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 – 12 ஜனவரி 1934) இந்திய விடுதலைப் போரின் புரட்சித் தலைவர்களில் முதன்மையானவர்; தேசபக்தி உணர்வு கொண்ட இளைஞர்களைத் திரட்டி புரட்சி படை அமைத்து, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட்டவர்; தாய் நாட்டின் விடுதலைக்குத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்; அவர் தான் புரட்சிப் போராளி சூர்யாசென். […]
freedom fighter
சாகித்திய கர்த்தாக்களைப் போற்றுவோம்! தமிழின் முதல் பெண் புதின ஆசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. வை. மு. கோதைநாயகி அவர்கள்.”Queen of Fictions” (டிசம்பர் 1, 1901 – பிப்ரவரி 20, 1960) வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி. 35 ஆண்டுகளில் 115 புதினங்கள்! தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதல் புதினத்தை எழுதியவர், வை.மு.கோதைநாயகி. அறியாத வயதில், பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணக் கொடுமைக்கு ஆளானவர். […]
குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்: அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு). மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் […]
சமூக நீதிக்காக போராடிய காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி நமது நாடு விடுதலை அடைந்து, 77 ஆம் வருடத்தை நாம் கொண்டாடி வரும் இந்த தருணத்தில், நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட எத்தனையோ வீர புருஷர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாமலே மறைக்கப்பட்டு உள்ளன. ஆங்கிலேயர்கள் “வரி” என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை, “கல்வி” என்ற போர்வையில் செய்த மதமாற்றங்களை, அவர்கள் பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் பத்திரிகை ஆரம்பித்து, அதன் மூலம் வெளிக் […]
மறக்கப்பட்ட மாமனிதர்கள்! Unsung Heros. சேலம் விடுதலைப் போராட்ட வீரர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினம் இன்று. [ 27.07.1874 – 07.12.1964 ] விடுதலைப் போரில் வட தமிழ்நாடு: யார் இந்த இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா? தமிழ் மொழிக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா. வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத் தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த […]
பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இன்று இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம். (23 ஜூலை 1906 – 27 பிப்ரவரி 1931) செவ்வாய்க்கிழமை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் 1906 ஆம் ஆண்டு பிறந்த ஆசாத்தின் இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. இவரது தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். சிறுவயதில், பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். […]
பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! வீரத்துறவி சுப்பிரமணியசிவா நினைவு நாள் இன்று. 23 – 07 – 2024. “சிவம் பேசினால் சவம் எழும்” என்ற மகாகவியின் வரிகளுக்குச் சொந்தமான வீரத்துறவி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று… பார்த்தேன்; படித்த்தேன்; பகிர்கின்றேன். பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் கட்டுரை: “சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற […]
சிப்பாய்ப் புரட்சி ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து, [ 1857-]இல் முதல் இந்திய சுதந்தரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்குச் சொந்தக்காரர் மங்கள் பாண்டே. வங்காளக் காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு […]
மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெக வீரராம பாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். […]
தோற்றம் : 26.06.1906 மறைவு : 03.10.1995 இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பிறப்பிடம் : சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் வாழ்வின் சிறப்புகள் : சிலம்புச் செல்வர் (வழங்கியவர் திரு.ரா.பி.சேது பிள்ளை) […]
