சுதந்திர போராட்ட வீரரும் சிறந்த தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளருமான பரலி. சு. நெல்லையப்பரின் நினைவு நாள் இன்று. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால், ‘தம்பி’ என்றழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தொண்டர். மகாத்மா காந்தியின் வழியில் சென்றாலும் ஜீவா போன்ற புரட்சி இயக்கத்தவர்களுடன் இறுதிவரை ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தார். பரலி சு நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு […]