சிப்பாய்ப் புரட்சி ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து,  [ 1857-]இல் முதல் இந்திய சுதந்தரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்குச் சொந்தக்காரர் மங்கள் பாண்டே. வங்காளக் காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு […]

மங்கள் பாண்டே கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் 1827ல் ஜுலை 19ஆம் தேதி மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை திவாகர் பாண்டே ஒரு விவசாயி.  நாக்வா கிராம மக்கள் இன்றும் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேவயே குறிப்பிடுவர். மிக தீவிரமான ஹிந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் சிப்பாயாக இணைந்தார். அக்கம்பெனியின் 34வது பிரிவில் […]