VSK TN
புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டு தேசம் கொதித்துப் போய் இருந்தது. பாரத விமானப்படை துல்லிய விமானத் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் மண்ணில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பாசறை முகாம்களை நாசம் செய்துள்ளது. கோடானுகோடிபாரத மக்களின் உணர்வு, சீற்றம் இவற்றை கச்சிதமான விதத்தில் செயலில் காட்டிய பாரத அரசையும் பாரத விமானப் படையும் பாராட்டுகிறோம். பாகிஸ்தானிய ராணுவத்திற்கோ அங்குள்ள பொது மக்களுக்கோ எந்தவித சேதமும் பாதிப்பும் ஏற்படாமல் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது தான் பாரதப் பண்பாட்டிற்கு இசைவான செயல்.
சுரேஷ் ஜோஷி
ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுச் செயலர்


One thought on “பாரத அரசைப் பாராட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்”