சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையினிடையே ‘ கிராமணி ‘ என்ற பதத்திற்கு ” பக்தர்களின் கூட்டத்தை வழி நடத்திச் செல்பவர் ‘ என்று தமிழில் பொருள் சொன்னார் தமிழும் சமஸ்கிரதமும் அறிந்த (உபய வேதாந்தி) சொற்பொழிவாளர். ஆஹா, தமிழ் தொண்டாற்றிய  ம பொ சியின் பெயரின் பின்னால் வரும் ‘ கிராமணியார் ‘ என்ற சொல்லும் தமிழிலும் சமமான பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கும்  போது மகிழ்ச்சி ரெட்டிப்பாயிற்று. இன்று இன்னொரு  ‘ ஆஹா ‘ தருணம். கி வா ஜவின் ‘ அபிராமி அந்தாதி ‘ விளக்கவுரையைப் படிக்கையில் ‘ முகிழ் நகையே ‘ என்ற […]

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார், ஆகவே தன் 11 ஆம் வயதிலேயே பாரதி என்னும் பட்டப் பெயரால் மக்களால் போற்றப்பட்டவர் இவர். ” அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொறு காட்டிவோர் பொந்திடை வைத்தேன் வெந்து தனிந்தது காடு – தழல் வீரத்திற் குஞ்சென்று முப்பென்று […]