பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியின் “புரட்சி இயக்க’’ நாயகன் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் நினைவு தினம் இன்று. [பிறப்பு:1889 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி . அமரத்துவ தினம்:1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி ] “தமிழகத் தியாகிகள்” என்னும் வலைப் பக்கப் பதிவிலிருந்து…. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி. நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்தரப் போராட்ட காலத்தில் […]

இந்திய அரசியலில் இன்றும் கூட சர்ச்சைக்குரிய தலைவர் உண்டென்றால் என்றால் அது விநாயக் தாமோதர் சாவர்க்கர் தான். அவரை பெரிதும் நேசிக்கும் தொண்டர்களுக்கு அவர்  ” ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் ” . அவர் வீரர் தான் . இவர் வெளியில் உலவினால் தமக்கு அச்சுறுத்தல் என்று பயந்த பிரிடிஷ் அரசு இவரை பயங்கரவாதியாக வகைப்படுத்தியது. அந்தளவு புரட்சிகர சிந்தனையுடையவர். லண்டனில் மாணவராக இருந்தபோதே இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை […]

சர்தார் வேதரத்தினம் பிள்ளை 1897-ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி வேதாரண்யத்தில் அப்பாகுட்டி பிள்ளைக்கும், தங்கம்மாள் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் வேதரத்தினம் பிள்ளை. இவரது மூதாதையர் தாயுமானவர் வழிவந்தவர் ஆகையால் சைவத்தையும், தெய்வபக்தியையும், தமிழையும் ஊட்டி அறநெறி வழுவாது வளர்த்தனர் பிள்ளையை. திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர், நாகைப்பட்டினத்தில் உயர்கல்வி கற்றார். பிள்ளையிடம் பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்ததால், தாய்மொழியாம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், […]

சாகித்திய கர்த்தாக்களைப் போற்றுவோம்! தமிழின் முதல் பெண் புதின ஆசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. வை. மு. கோதைநாயகி அவர்கள்.”Queen of Fictions” (டிசம்பர் 1, 1901 – பிப்ரவரி 20, 1960) வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி. 35 ஆண்டுகளில் 115 புதினங்கள்! தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதல் புதினத்தை எழுதியவர், வை.மு.கோதைநாயகி. அறியாத வயதில், பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணக் கொடுமைக்கு ஆளானவர். […]

குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்: அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு). மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் […]

செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் -15, 1891 – மே-26, 1934) தமிழகத்தைச் சேர்ந்த மாபரும் விடுதலைப் போராட்ட போராளி. “சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்” என வீரமுழக்கமிட்ட போராளி. நம் தாய்த் திருநாட்டில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றது மட்டுமின்றி, ஜெர்மனி, வியன்னா, தென்னாப்பிரிக்கா போன்ற பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்தும் இந்திய சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டிய […]

சமூக நீதிக்காக போராடிய காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி நமது நாடு விடுதலை அடைந்து, 77 ஆம் வருடத்தை நாம் கொண்டாடி வரும்  இந்த தருணத்தில், நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட எத்தனையோ வீர புருஷர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாமலே மறைக்கப்பட்டு உள்ளன. ஆங்கிலேயர்கள் “வரி” என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை, “கல்வி” என்ற போர்வையில் செய்த மதமாற்றங்களை, அவர்கள் பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் பத்திரிகை ஆரம்பித்து, அதன் மூலம் வெளிக் […]

மறக்கப்பட்ட மாமனிதர்கள்! Unsung Heros. சேலம் விடுதலைப் போராட்ட வீரர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினம் இன்று. [ 27.07.1874 – 07.12.1964 ] விடுதலைப் போரில் வட தமிழ்நாடு: யார் இந்த இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா?  தமிழ் மொழிக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா. வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத் தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த […]

      ஜூலை 23 2024 அன்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், 1040 சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும், தியாகச் சுவர் திறப்பு விழாவில் சர்சங்கசாலக் பரமபூஜனீய டாக்டர் மோகன் பாகவத் ஜி பேசிய உரையின் சாராம்சம் நாம் பாரதீயர்கள். பாரதம் மிகவும் தொன்மையான நாடு. .பழங்காலத்திலிருந்து இன்று வரை உயிரோட்டமான நாடு. . சீனாவை விட நமது தேசம் மிகவும் பழமையானது. உலகில் ரோமாபுரி, கிரேக்கம் […]

பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! வீரத்துறவி சுப்பிரமணியசிவா நினைவு நாள் இன்று. 23 – 07 – 2024.   “சிவம் பேசினால் சவம் எழும்” என்ற மகாகவியின் வரிகளுக்குச் சொந்தமான வீரத்துறவி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று… பார்த்தேன்; படித்த்தேன்; பகிர்கின்றேன். பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் கட்டுரை: “சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற […]