திருச்சி அருகிலுள்ள குளத் தூரில் 1826-ல் பிறந்தவர் வேத நாயகம். இவரது தந்தை சவரி முத்து பிள்ளை, தாய் ஆரோக்கிய மரியம். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தியாகராசபிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர் 11-வது வயதிலேயே தமிழில் புலமை […]