மருந்து தட்டுபாட்டை தகர்த்தெறிந்த தன்னார்வலர். கடந்த வருஷம் [2019] கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராணிப்பேட்டை ஸ்வயம்சேவகர் பாண்டியராஜனுக்கு, கண்ணில் அவ்வப்போது போட வேண்டிய சொட்டு மருந்து தீர்ந்து விட்டது. சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த அந்த மருந்தை கொரோனா ஊரடங்கு சமயத்தில், எப்படி சென்னையிலிருந்து வாங்கி வருவது என்று கவலையுற்றார். அவர் தன்னுடைய மருந்து தேவையை முக நூல் பக்கத்தில் பதிந்தார். சென்னையில் உள்ள நண்பருக்கும் தெரிவித்தார். […]