நாரத ஜெயந்தியை முன்னிட்டு வலை அலையில் உரையாற்றிய தக்ஷிண், தக்ஷிண் மத்ய கிராம விகாஸ் அமைப்பாளர் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் ஜி, நாரதரின் மேன்மைகளையும், இன்றைய பத்திரிக்கையாளர் நாரதரின் பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். நாரதர் புராண கால பத்திரிகையாளர். ஏனெனில் பத்திரிகையாளருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் நிறைந்துள்ளன. பாகவத புராணத்தில் நாரதரின் குணங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. நாரதர், பிரும்மாவின் புத்திரர்களில் ஒருவரான முனிவர். சனகாதி முனிவர்களின் சகோதரர். […]
